Saturday 11th of May 2024 10:03:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாளில் ஆறு விபத்து: எழுவர் பலி!

ஒரே நாளில் ஆறு விபத்து: எழுவர் பலி!


ஒரே நாளில் இடம்பெற்ற ஆறு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்றைய (நவ-30) நாளில் இடம்பெற்ற 6 விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை, கடந்த இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ள நாளாக நேற்றைய நாள் அமைந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதியிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் மிகக் குறைந்தளவிலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த வாரம் ஆரம்பம் முதல் மீண்டும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE